Thursday, 25 September 2014

வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டுமா?


எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
1. ’வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டும்’ என்று சொல்வார்கள்.
2. குளித்து விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும் என்பார்கள்.
  எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
  **   துன்பம் நெருங்கும் போதெல்லாம் பூஜையில் உட்காருங்கள். சோதனை நேரும் போதெல்லாம் உட்காருங்கள். அடுத்தவர் மீது கோபம் வரும்போது உட்காருங்கள்.
  **    சந்தோஷம் வரும் போது நன்றி செலுத்துவதற்காக உட்காருங்கள். நோயுற்றபோது நோய் தீரப் பிரார்த்தனை செய்வதற்காக உட்காருங்கள்; நோய் தீர பிரார்த்தியுங்கள்.
        புறந்தூய்மை வெறும் தண்ணீரால் அமைகிறது;
        அகந்தூய்மைதான் உங்கள் வாய்மையில் காணப்படவேண்டும்.
        பக்தி தத்துவம் பயன் மிக்கது.
        பாவிகளையும் துரோகிகளையும் விட்டு விலகி நிற்கப்  
        பரமேச்வரனைச் சரணடையுங்கள்.
    ***  பிறப்பிற்கு முன்னால் அவனிடம்தான் இருந்தோம்;
        இறப்புக்குப் பின்னால் அவனிடம்தான் போகப்போகிறோம்.

                              *********

No comments:

Post a Comment