Tuesday, 23 September 2014

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வருகை தரும்பொழுது கொண்டு வரவேண்டிய பொருட்கள் பட்டியல்

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வருகை தரும்பொழுது கொண்டு வரவேண்டிய பொருட்கள் பட்டியல்

பூஜைப்பொருட்கள்

மஞ்சள்தூள்                                    25 கிராம்
குங்குமம்                                      25    “
எள்ளு                                         25    “
பூணூல்  (அணிபவர்கள் மட்டும்)                1
வெற்றிலை                                    25
பாக்கு                                         25 கிராம்
ஊதுவத்தி                                     சிறிய பாக்கெட்
கற்பூரம்                                       10 கிராம்
தீப்பெட்டி                                      1

பூஜை செய்ய பாத்திரங்கள்
பித்தளை கலச சொம்பு, பஞ்சபாத்திரம், தாம்பாள தட்டு                                    

வாழை இலை (தலை இலை)                   1
வாழைப்பழம்                                   6
உரித்த தேங்காய்                                2
பூச்சரம்                                         5 முழம்

பசுவிற்கு தானம்

கோதுமை தவிடு                                2 கிலோ
வெல்லம்                                       250 கிராம்

அகத்திகீரை                                     1 கட்டு
                  

தானம்
காய்கறிகள்                                     5 வகை
                                   (பூசணி, வாழைதண்டு தவிர்க்கவும். ஏன் எனில், சீக்கிரம் உபயோகிக்க வேண்டியுள்ளது.. முழு பூசணி பிஞ்சு எனில் பரவாயில்லை. வாழைதண்டு தவிர்க்கவும்.)
தரமான பச்சரிசி                                 1 கிலோ
1 ரூபாய்  காசு                                  11
கடலை பருப்பு                                  250 கிராம்
பயத்தம் பருப்பு                                  “
துவரம் பருப்பு                                   “
உளுத்தம் பருப்பு                                 “
வர மிளகாய்                                     “
புளி                                             “
உப்பு                                             100 கிராம்
மிளகு                                            25 கிராம்
சீரகம்                                            25 கிராம்
கடுகு                                            25 கிராம்
வெந்தயம்                                       25 கிராம்
வீட்டில் படையல்
கடல் / ஆறு  / குளம் -  தர்ப்பணம் முடித்தவுடன் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

1.   மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.
2.   மரமணை வைத்து அதில் அவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.
3.   இரண்டு குத்து விளக்கு (ஒரு முகம் ஏற்றவும்). மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு,காரம்,பழங்கள்
4.   தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழை இலை படையல் போடவும்.
5.   ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்யவும்.
   அன்ன தானம்
   கோதுமை தவிடு -2 கிலோ, அகத்திக்கீரை, வெல்லம் -¼ கிலோ, வாழைப்பழம் -3  ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.

   **  ராகு காலம், எமகண்டம் ஆகியன தர்பணத்திற்கு பொருந்தாது.
   **  மதியம் உச்சிக்காலம், அபரான்ன காலம் தர்பணம் செய்ய மிகவும்
      உகந்த காலம்.
   **  தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலை முறை பெயரை
      அறியவும்.
     **  பூஜையின் பொழுது பாரம்பரிய, கலாசார பருத்தி, கதர்,
        பட்டாடைகளை உடுத்தவும்.
     **  தேவையான –பட்டியலில் உள்ள பொருட்களை தயாராக 
        வைக்கவும்.
     **  பிராமணருக்கு தருவது  தட்சணை. அதாவது அவர் செய்த
        பணிவிடைக்கு அளிக்கும் சம்பளம். அது தானம், தர்மம்,
        புண்ணியம் என்று தவறாக கருதவேண்டாம்.

        இந்து மதத்தின் அடிப்படையே தர்மம்தான். தர்ப்பணம் மற்றும் தானம் மூலமாகவே புண்ணியம் கிட்டும்.  மேலும் தானம் செய்வது அவரவரின் வசதிக்குட்பட்டது.

               --------------------------------------------------------------------------------




  

No comments:

Post a Comment