Saturday, 13 September 2014

யோகம்

யோகம்  -  என்றால் அதிர்ஷ்டம் குட்லக் என்று பொருள்படும். பஞ்சாங்கத்தில் 

உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.



அவையாவன:  

1. அமிர்த யோகம்

2. சித்த யோகம்


3. மரண யோகம்  என்பன..


மரண யோகம்  என்றால் என்ன? எப்படி கணிக்கிறார்கள்?


       சில கிழமைகளுடன்  சில நட்சத்திரங்கள்  சேரும்போது,  அது ஒவ்வாத

நாளாகிவிடும்.  அன்று மரண யோகம்.  மரண யோகத்தன்று சுப காரியங்களை

செய்ய மாட்டார்கள்.


எந்த கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் சேரும்போது, அது உண்டாகும்...

--------------------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு                                                      -  அவிட்டம், கார்த்திகை

திங்கள்                                                       -  அச்வினி, உத்திராடம்

செவ்வாய்                                                 -  பூரட்டாதி, ரோகிணி, விசாகம்,  

                                                                           திருவாதிரை.

புதன்                                                            - ஹச்தம்


வியாழன்                                                  -சதயம்,கார்த்திகை,அனுஷம்,உத்திரம்,    

                                                                        திருவாதிரை.


வெள்ளி                                                      - ரோகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்


சனி                                                              - ஆயில்யம்,பூரட்டாதி,சித்திரை,உத்திரம்

------------------------------------------------------------------------------------------------------------------------        


                              மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்ட இந்த நட்சத்திரங்கள் 

சேர்ந்து வந்தால் அன்று மரண யோகம் . மரண யோகத்தன்று சுப

காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.


சரி, அன்று என்னதான் செய்யலாம்..?

             வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப்

பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த

வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. இதுபோல முடிவிற்குக் கொண்டு வர

வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

No comments:

Post a Comment